வானிலை தொடர்பான அறிவிப்பு!

வங்காள விரிகுடாவில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் வியாழன் (26-01-2023) மற்றும் வெள்ளிக்கிழமை (27-01-2023) பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், 28 மற்றும் 29ஆம் திகதிகளில் மழை குறைவடைவதுடன், ஜனவரி 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் மழை காலநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.